குர்ஆனை கற்றவர்
بسم الله الرحمن الرحيم عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدْرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لاَ يُوحَي إِلَيْهِ لاَ يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَجِدَ مَعَ مَنْ وَجَدَ وَلاَ يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلاَمُ اللهِ. رواه الحاكم எவர் குர்ஆனைக் கற்றாரோ அவர் நபித்துவ ஞானங்களைத் தமது விலா எலும்புகளுக்கு மத்தியில் அமைத்துக் கொள்கிறார், ஆயினும் அவருக்கு வஹீ மட்டும் வருவதில்லை. குர்ஆனை மனனம் செய்தவருக்கு கோபம் கொள்வோருடன் சேர்ந்து கோபங் கொள்வதும், அறிவற்றோருடன் சேர்ந்து அறிவற்ற முறையில் நடந்து கொள்வதும் முறையல்ல, ஏனென்றால், அவர் தமக்குள் அல்லாஹ்வின் வசனங்களைச் சுமந்திருக்கிறார்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ருப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)