குர்ஆனை கற்றவரின் மகிமை
بسم الله الرحمن الرحيم
عَنْ بُرَيْدَةَ اْلاَسْلَمِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجاً مِنْ نُورٍ ضَوْؤُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ وَيُكْسَي وَالِدَيْهِ حُلَّتَانِ لاَ يَقُومُ بِهِمَا الدُّنْيَا فَيَقُولاَنِ بِمَا كُسِينَا هذَا؟ فَيُقَالُ بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ.
رواه الحاكم
குர்ஆனை ஓதி அதைக் கற்று அதன் படி செயல்படுபவருக்கு இறுதித் தீர்ப்பு நாளன்று ஒளியால் ஆன கிரீடம் அணிவிக்கப்படும், அதன் ஒளி சூரியனைப் போன்று இருக்கும், முழு உலகமும் நிகராக முடியாத இரு ஆடைகள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும், இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன?'' என்று அவர்கள் கேட்பார்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் குர்ஆனை கற்றுக் கொடுத்ததற்குப் பகரமாக!'' என்று பதில் கூறப்படும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் புரைதா அஸ்லமீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(நூல்:முஸ்தத்ரக் ஹாகிம்)
Comments
Post a Comment