சுவனத்தில் செடி நடுங்கள்

 بسم الله الرحمن الرحيم 


عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْساً فَقَالَ: يَا أَبَا هُرَيْرَةَ! مَا الَّذِي تَغْرِسُ؟ قُلْتُ: غِرَاساً لِّي قَالَ: أَلاَ أَدُلُّكَ عَلَي غِرَاسٍ خَيْرٍ لَّكَ مِنْ هذَا؟ قَالَ: بَلَي يَارَسُولَ اللهِﷺ قَالَ: قُلْ: سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ يُغْرَسُ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ.

رواه ابن ماجه


ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் செடி நட்டுக்கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அபூஹுரைரா! என்ன நட்டுக் கொண்டிருக்கிறீர்?'' எனக் கேட்டார்கள், எனக்காக செடி நடுகிறேன்' என்றேன். இதை விடச் சிறந்த செடியை உமக்கு நான் சொல்லவா?'' எனக் கேட்டார்கள், அவசியம் அறிவியுங்கள் யாரஸூலல்லாஹ்!' என்றேன். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்'' இவற்றில் ஒவ்வொரு வார்த்தைக்குப் பகரமாக சுவனத்தில உமக்கு ஒரு செடி நடப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல்:இப்னுமாஜா)

Comments

Popular posts from this blog

நபிக்கு கொடுக்கப்பட்ட சூராக்கள்

நகை கடை வைப்பது எப்படி

குர்ஆனை கற்றவர்